சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் அதிகாலை சத்தியமங்கலம் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பிக்கப் வேன் ஒன்றை சோதனையிட்டனர்.
அதில் வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், வெங்காய மூட்டைகளை அகற்றி பார்த்த போது, அதில் 50க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த பிக்கப் வேனை பறிமுதல் செய்த சத்தியமங்கலம் போலீசார், சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். அதில் மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, பிக்கப் வேனை ஒட்டி வந்த சாம்ராஜ்நகர் சேர்ந்த மகேந்திரன் (32) மற்றும் உதவியாளர் பிரமோத் (22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.