பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

உடையார்பாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கோடை விடுமுறை காரணமாக சொந்த ஊரான இடிச்சு குளி கிராமத்திற்கு தனது குழந்தைகள் அட்சயா, அபி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார்

இந்நிலையில் பிலிச்சுகுழி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற அட்சயா அபி இருவரும் தண்ணீரின் ஆழப் பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குளிப்பதற்கு சென்ற இருவரையும் வெகு நேரமாகியும் காணவில்லை என்று உறவினர்கள் சென்று பார்த்த போது இருவரும் மயங்கி நிலையில் தண்ணீரில் மூழ்கி கிடந்துள்ளனர் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் பரிசோதித்த போது அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அட்சயா அபி இருவரும் ராணுவப் பள்ளியில் படித்து வந்ததாகவும் அக்ஷயா நீட் தேர்வு எழுதி உள்ளதாகவும் இந்நிலையில் அவர்கள் இருவரது மரணமும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர்களது தந்தை முருகானந்தம் தனது குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு விமான மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *