மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பிரதிநிதி அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான் அவர்கள்
நெஞ்சம் நிறைந்த மனிதநேய உறவுகள் அனைவருக்கும் என்
உள்ளம் கனிந்த ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
ஈத் முபாரக். அகிலத்தின் அதிபதி அல்லாஹ் நம்மிடம் இருந்து நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக
தங்களை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி!!
இறைவழியில் இறை பொருத்தத்திற்காக தியாகங்கள்
பல செய்திட்ட தியாக சீலர்களின் தியாகத்தை போற்றுவோம்! அத்தகையோரின் நினைவுகளை நெஞ்சம் சுமந்திருக்கும் இந்நாளில் இத்தருனத்தில் உலகளாவிய அளவில் முஸ்லிம்களின் ஈமானிய உறுதி வலுப்பெறவும், சோதனைகள் நீங்கி கண்ணியப்படவும்,
முழு மனித சமுதாயமும் நேர்வழி பெற்றிடவும், அதில் நிலைத்திடவும், மனிதநேயம் தழைத்திடவும், இம் மண்ணில் சமத்துவம், சமூகநீதி, சமூக நல்லிணக்கம் காக்கப்படவும், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலைத்திடவும் தழைத்திடவும், வறுமை ஒழிந்து எல்லா நலமும் வளமும் எல்லோரும் பெற்றிடவும், அனைவரும் நோயின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இன்புற்று வாழவும் வல்ல இறைவன் தனது பேரருளை நம் அனைவரின் மீதும் பொழிந்திட இந்நாளில் இறைஞ்சுகின்றேன்.
என அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான்
தெரிவித்துள்ளார்.