சோழவந்தான் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அருள்பாலித்து வரும் எல்லைகாளியம்மன் கோவில் 28 .ம் ஆண்டுஆனி முளைப்பாரி உற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்தஜுன் 20.ல் பக்தர்கள் காப்பு காட்டி விரதமிருந்து வந்தனர்.
இதைதொடர்ந்து தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன் தினம் காலை வைகையாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம் தீசட்டி எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர் பின்னர் .அன்று மாலை பெண்கள் முளைப்பாரி எடுத்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
இதையெடுத்து நேற்று முளைப்பாரி எடுத்து சென்று வைகையாற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடந்தது.இவ்விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.