கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் மகாலட்சுமி கலியபெருமாள் ஆகியோரின் மகள் மதுமிதா வால்பாறையிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் பள்ளியில் 575/600 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல மற்றொரு மகள் வர்சினி என்பவர் வால்பாறையிலுள்ள பியூலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று 435/500 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நகரக்கழகத்தின் சார்பாக நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.பி.ஆர் என்ற ஜே.பாஸ்கர்,8 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சி.இந்துமதி ஆகியோர் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் நிதியுதவியை மாணவியின் பெற்றோரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *