வலங்கைமானை அடுத்த வீராணம் ஊராட்சியில் போதைப் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திறகுட்பட்ட வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும்100நாள் பணியாளர்களிடம் உலக
போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரி, ஆசிரியர் சரவணன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அது சமயம் போதைப் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.

அரித்துவாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய
சுகாதார மேற்பார்வையாளர் கோபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக்ராஜா, அரவிந்தன், சதீஷ்
குமார், ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் கொசு புழ ஒழிப்பு பணியாளர்கள் சுதாகர், பிரபாகரன், சந்திரசேகர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *