சத்தியமங்கலம் மணிக்கூண்டில் இருந்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மணிக்கூண்டில் இருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் தக்னி சுன்னத் ஜமாஅத் தலைவர் நதிமுல்லாகான் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது .

அதனை தொடர்ந்து மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து இறை வழிபாடு மேற்கொண்டனர்பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவிக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் இந்த தொழுகையில் ஈடுபட்டனர்இதே போல் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *