தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.இந்நிலையில்,கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது

இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.இதில் பள்ளித் தலைவர் அமானுல்லா, செயலாளர் பீர்முகமது, முத்தவள்ளி ஜாபர் அலி, பொருளாளர் அன்வர், துணைத் தலைவர்கள் சாகுல் ஹமீது,கமிட்டி உறுப்பினர்கள் ஆஷிக் அகமது, முகமது சபீக், முகமது யூசுப், ஹிதாயத்துல்லா, முகமது இப்ராஹிம், நிஜாமுதீன்,நவ்ஷாத் காஜா உசேன் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *