சோழவந்தான்
செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் விரிவாக்க பகுதியான வண்ணாகோவில் குடியிருப்பு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இது வரை குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாத நிலையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5.லெட்சம் மதிப்பீட்டி சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
மின் மோட்டருக்குதேவையான மின் இணைப்பு இது வரை கொடுக்காமல் யூனியன் அதிகாரிகள் இழத்தடித்து வருவதால் இக்குடியிருப்பு வாசிகள் குடம் .ரூ.10.க்கு விலை கொடுத்து வாங்கி பருகி வரும் அவல நிலை தொடர்கின்றது.இது பற்றி குடியிருப்பு வாசி ஜாமுனாராணி.
கூறியதாவது. வண்ணாகோவில். விரிவாக்க குடியிருப்பு பகுதியில் வீடு மற்றும் தெருவில் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் இணைப்பு இல்லை இதனால் குடிநீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றேன் இப்பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மின் இணைப்பின்றி செயல்படாமல் உள்ளதால் குடியிருப்பு வாசிகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றோம் என்றார்.