பொன்னேரி

திருநிலை ஊராட்சி பம்ப் ஆப்ரேட் டர் ஓய்வு பெற்றதையடுத்து அவரு க்கு தலைவர் அம்மு சிவக்குமார் சார்பில் பணி ஓய்வு பிரிவு உபசார விழா நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. திருநிலை ஊராட்சி இந்த ஊராட்சியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பம்ப் ஆப் ரேட்டராக லோகநாதன் என்பவர் சிறப்பாக மற்றும் பொதுமக்களின் பெரும் பாராட்டுதலை பெற்று பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று ஓய்வு பெறுவதையடுத்து திருநிலை ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் தலை மையில் பணி ஓய்வு பிரிவு உபசார விழா விமர்சையாக கொண்டாடப் பட்டது. 

இதற்கான நிகழ்ச்சி திருநிலை ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே நடைபெற்றது இவ்விழாவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசே கர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆயிஷா பிரதாபன், ரேவதி ஜான் சன், பிரகதி வின்னரசு, பூபதி கவி தா,வெங்கடேசன், ஊராட்சி மன்ற செயலாளர் ஷர்மிளா, மற்றும் ஊராட்சியில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரி யும் பெண்கள், மகளிர் குழுவினர், கிராம பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக பம்ப் ஆப்ரேட்டர் லோக நாதன் அவர்களின் பணி குறித்து பலர் பாராட்டி பேசினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *