அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவ விழாவில் மறவபட்டி பூசாரி வீட்டில் இருந்து அம்மனை அழைத்து வருதல். தொடர்ந்து பூசாரி வீட்டில் இருந்து நகை பெட்டியை தூக்கி சென்று அம்மனுக்கு கண் திறந்து நகை அலங்காரத்துடன் அம்மனை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நாயுடு உறவின்முறை சார்பாக சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து தெற்கூர் நாயுடு இளைஞர் சங்கம் சார்பாக பழதட்டு ஊர்வலம், சிறப்பு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அம்மன் முலைப்பறியுடன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சியில்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்..