கோவை மாவட்டம் வால்பாறை 21 வது வார்டுக்கு உட்பட்ட சின்கோனா எஸ்டேட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட அதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இப்பூமிபூஜையை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் ஆ.குட்டி என்ற சுதாகர், நகராட்சி அதிகாரிகள் ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன், பாண்டியராஜன், நகராட்சி ஒப்பந்ததாரர் உட்பட பலர் உடனிருந்தனர்