கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என அசத்தலாக விளையாடிய மாற்றுத்திறனாளி வீர்ர்கள்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மாநில அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற இதில், தமிழ்நாடு,பாண்டிச்சேரி,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநில அணிகளை சேர்ந்த வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டு வீர்ர்கள் கலந்து கொண்டனர்..
முன்னதாக போட்டிகளை துவக்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மாற்றுத்திறனாளி வீர்ர்களுடன் கலந்துரையாடினார்.

மாற்று திறனாளிகளின் திறமைகளை மட்டும் வெளிக்கொண்டு வராமல் சக்கர நாற்காலி கூடைப்பந்து பற்றிய விழிப்புணர்வையும் விளையாட்டு உலகில் ஏற்படுத்தும் வகையிலும்,மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தி, விளையாட்டு துறையில் ஈடுபடுத்தும் நோக்கில்,நடைபெற்ற இப்போட்டிகளில்,கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்கள் அசத்தலாக பந்தை லாவகமாக எடுத்து சென்று விளையாடினர்.. சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் இந்த விளையாட்டை பார்வையாளர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *