வாடிப்பட்டி.
மதுரை கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சார்பில் மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகள் சாதனை விளக்கம் கூட்டம் வாடிப்பட்டி மந்தை திடலில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் முத்துராம். கோசா.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தானர் .பொது செயலாளர் வழக்கறிஞர் மாதவ. கண்ணன் வரவேற்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி. மற்றும் மாநில வர்த்தக. பிரிவு தலைவர். ராஜா கண்ணன்.ஆகியோர்.மத்தியபாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆட்சியின் 9.ஆண்டுகள் சாதனை குறித்து சிறப்புரையாற்றினர்.

இதில் மாநில நிர்வாகிகள். கே.சி பாண்டியன் பழனி வேல்சாமி. மாவட்ட பார்வையாளர் மகாலெட்சுமி. மாவட்ட துணை தலைவர் கோவிந்தா மூர்த்தி .செல்வி .மண்டல தலைவர் கதிர்வேல் .அழகர்சாமி.சேதுராமன்.பங்களா அருண்.
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி. செய்தியாளர்களிடம் கூறியதாவது..மத்திய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 9.ஆண்டுகால ஆட்சியில் மதகலவரங்கள் நடக்கவில்லை.தமிழகத்தில் திமுகதான் மதவாத கட்சியாகும்.வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்ததை கண்டுபிடிக்க முடியாத அரசு தீண்டாமையை பற்றி பேச தகுதியற்றநிலையில்.மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வருமானமுள்ள முக்கிய இலாகா கொடுத்து வருகின்ற முதல்வர் ஸ்டாலின் திமுகவில் திறமை யில்லாதவர் உள்ளனர் என்பதை ஒத்துகொண்டு உள்ளார்.

மேலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மத்திய அரசு 18.ஆயிரப் கோடி நிதி செய்தநிலையில் கமிஷன் கிடைக்கு என்பதற்காக அனல் மற்றும்நீர் மின் சக்தி மின் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழக அரசு மத்திய அரசின் 25.% மானித்துடன் கூடிய சோலார் மின் உற்பத்திக்கு உடன்படாதது .ஏன்.?.
இந்து அறநிலை துறை நிர்வாகம் திமுக கைபாவையாக செயல்படுகின்றது.இதனால் தமிழக திமுக ஆட்சி
இந்து விரோத மற்றும் மக்களின் விரோத அரசாக. செயல்பட்டு வருகின்றது.மேலும் மதசார்பற்ற நாட்டில் தற்போது மதத்திற்கொரு சட்டம் உள்ளதால் இந்தியாவில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என தொரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *