பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம் 30 க்கும் மேற்பட்ட காளைகள், 60 க்கும் மேற்பட்ட குதிரைகள் சீரி பாய்ந்தன
தஞ்சாவூர்மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலய சந்தனகாப்பு உற்சவ திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக கணபதி பிரதர்ஸ் நடத்தும் மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம் கீழகபிஸ்தலம் பவுண்டு நெடுஞ்சாலையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் செல்வ பாண்டியர் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து பந்தயத்தை துவங்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில் 30 க்கும் மேற்பட்ட காளைகளும், 50. க்கும் மேற்பட்ட குதிரைவண்டிகளும் புயலை காற்றை போல சீரி பாய்ந்தன…
100 க்கும் காளைவண்டி, குதிரை வண்டி வீரர்களும் கலந்து கொண்டு எல்லைகோட்டை விரட்டி சென்று வெற்றிப் பெற்றனர்..
இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள், வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் முன்னேற்பாடகாக 108 ஆம்புலன்ஸ் , 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.