பா.வடிவேல், அரியலூர் மாவட்ட செய்தியாளர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு சாசன தலைவர் K.சிவக்குமார் முன்னிலை வகித்தார் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஷேக் தாவூத் புதிய பொறுப்பாளர்களை பணியமர்த்தி சிறப்புரையாற்றினார். பெரம்பலூர் அரிமா சங்கம் விஷால் சரவணன், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து,
புதிய தலைவராக கொடியரசு, செயலாளராக ரமேஷ் பொருளாளராக குமார் ஆகியோர்கள் புதியதாக பொறுப்பேற்று கொண்டனர்.
மேலும் சினேகம் கிங்ஸ் லயன் சங்கத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நிகழ்ச்சியில் முன்னதாக, பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது இதில் சாசன செயலாளர் சரவணகுமார் மண்டல தலைவர் ராஜேந்திரன் வட்டார தலைவர் ஜோதி உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.