சோழவந்தான்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அறிவியியல் மன்றம் சார்பில் கலாமின் 8.வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மன்ற தலைவர் சரவணன் தலைமையில் அவரது உருவ படத்திற்கு மாலை யணிவித்து மரியாதை செய்து மௌன அஞ்சலி செலுத்தி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கினர்.

இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாரத ரத்னா அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலையவித்து மரியாதை செய்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி மரம் வளர்போம் மழை பெறுவோம் என உறுதி மொழி கூறினர்..

இந்நிகழ்வுகளில் ஊராட்சி தலைவர் பழனிவேல் துணை தலைவர் கேபிள்ராஜா. தலைமையாசிரியைகள் சாந்தி. பூங்கொடி. கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகாரன்.ரமேஷ்.மற்றும் கலாம் மன்ற நிர்வாகிகள் பாண்டி .பாலகுரு.முள்ளை தவம் ரவிசந்திரன்.ஆறுமுகம். விக்கி. விஜயன் சூரியா. மலைராஜன். உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *