வலங்கைமான் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில்
6-ஆம் ஆண்டு 108 பால்குடம் விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அங்காள ம்மன் கோவில் தெருஸ்ரீ அங்காள பரமேஸ்வரிஆலயத்தில் 6-ஆம் ஆண்டு 108 பால்குடம் விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடை பெற்றது. காலை 9 மணிக்கு குடமுருட்டி ஆற்றாங்கரையில் இருந்து 108 பால் குடம்ஊர்வலம் புறப்பட்டு வீதியுலா வந்து மதியம் 12 –
மணிக்கு ஆலயத்தை அடைந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள்நடைப்பெற்று பக்தர்களு க்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து அன்னதான
நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை 6மணிக்கு சுபமங்கலிகள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், தெருவாசிகள், குலத்தெய்வக்காரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.