திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பன்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சீனிவாசன் ஆவார்.
இவரது ஊராட்சியில் உள்ள ரெடி ங்டன் என்ற தனியார் நிறுவனத் திடம் தலைவர் சீனிவாசன் ஊராட் சிக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வாங்கி தருமாறு கோரி க்கை விடுத்தார். இவரது கோரிக் கை ஏற்று ரெட்டிங்டன் நிறுவனம் சி எஸ் ஆர் நிதி மூலம் இரண்டு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாக னங்களை வழங்கியது.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் பேட்டரி வாகனத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி உபயோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஷெட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இத னால் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் பழுதாகமல் பாதுகாப்பா க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.