தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

விவசாயி மீது மணல் கடத்தல் கும்பல் கொலை வெறி தாக்குதல், நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் .

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் விவசாயி என்பவரை அதே பகுதியை சேர்ந்த நாட்றம்பள்ளி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளரும்,மாவட்ட கவுன்சிலருமான சாமுடி,அவரது மகன்கள் பவித்திரன்,மணிகண்டன் ஆகியோர் அரசுக்கு சொந்தமான ஏரியில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு,பகலாக மண் மற்றும் மணல் கடத்ததிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இதனை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு வேலாயுதம் என்பவர் தகவல் அளிப்பதாக கூறி
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த வேலாயுதத்தை மணிகண்டன்,பவித்தரன் ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பரட் ஜான் யிடம் வேலாயுதம் புகார் மனு அளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *