வலங்கைமான் லாயம் கோல்டன் சிட்டி காந்தி நகரில் ஸ்ரீ கருந்தார் குழலிஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன்
நூதன பிரதிஷ்டை, திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் லாயம்
கோல்டன் சிட்டி காந்தி நகரில் எழந்தருளிக்கும்
ஸ்ரீ கருந்தார் குழலி ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன்நூதன பிரதிஷ்டையைமுன்னிட்டு கடந்த 28-ந்தேதி திங்கட்கிழமை மாலை 7-மணி முதல்7. 30
மணிக்கு பிரவேச பலி,வாஸ்து சாந்தி, மாலை7.30மணிமுதல் 9மணிக்கு யாகசாலைபிரவேசம், கணபதி பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை,கலச பூஜை, இரவு 10-மணிக்கு அஷ்டபந்தனம் முருகனுக்கு மருந்து சாத்துதல் நடைபெற்று,
மறுநாள் 29-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30மணி முதல்
9-மணிக்குள் கோ பூஜை,இரண்டாம் கால யாகசாலை பூஜை, கடம்புறப்பாடு, ஸ்ரீ முருகனுக்கு திருக்குடநன்னீராட்டு விழா, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும்அருட்பிரசாதம் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை லாயம் கோல்டன் சிட்டிகாந்தி நகர் வாசிகள்சிறப்பான முறையில்செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *