எஸ். செல்வகுமார் செய்தியாளர்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக் கோரியும், என்னும் எழுத்தும் திட்டத்தில் பி. எட் மாணவர்களை கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடும் SCERT இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற கோரியும், தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி தேர்வுகளை கைவிடக் கோரியும், எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்ககூடாது எனவும், தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தின் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த கோரியும் ,உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *