நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது

கடந்த ஒரு வருட காலமாக நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்து நடக்க இருக்கும் கும்பாபிஷேக விழா குறித்து இன்று ஸ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் கா. நல்லசாமி தலைமையில் நடைபெற்றது

அறங்காவலர்கள் சௌ. செல்வ சீராளன், ம. மல்லிகா குழந்தை வேல், ரா. இராம சீனிவாசன், எம். ஜி. எஸ் ரமேஷ்பாபு, உள்ளிட்டவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி இளையராஜா முன்னிலை நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
மேலும் நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, நகர மன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு கும்பாபிஷேக விழா எவ்வாறெல்லாம் பக்தர்களுக்கு வசதியாக ஏற்பாடுகளை செய்து நடத்த வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *