வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குதேர்வு:-
வீரகேரளம்புதூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாழ்த்து;-
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் மாலதி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்
ஆசிரியர் மாலதியை பாரட்டு விதமாக வீரகேரளம் புதூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆசிரியர் மாலதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து, நகரத் தலைவர் இசக்கிமுத்து, ஒன்றிய கூட்டுறவு பிரிவு தலைவர் சின்னத்தம்பி, ஒன்றிய பொருளாதார பிரிவு தலைவர் கண்ணன், ஒன்றிய இளைஞரணி பொதுச் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் செந்தில்குமார், உட்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.