சோழவந்தான்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயவீரர்கள் கூட்டம் தென்கரை சமுதாயகூடத்தில் நடந்தது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் அவைதலைவர் சுப்பிரமணி.முன்னிலை வகித்தார்.கிளை செயலாளர் சோழராஜன் வரவேற்றார்
.இதைதொடர்ந்து செப்.20.ல் மேலுரில் நபைபெறும் திமுக கூட்டத்தில் கட்சியின் சார்பில்.பொற்கிழி வழங்க மூத்தநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தொடுப்பது மற்றும் சேலத்தில் டிச.17.ல் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் மாநில பொதுகுழ ஸ்ரீதர் மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் .நீலமேகம் ராஜா பெரியகருப்பன் ஊத்துகுழி ராஜாராம். ரேகாவீரபாண்டி சிறுமணி. சாந்திராஜா.மற்றும் கிளை நிர்வாகிகள் கேபிள்ராஜா செந்தில். மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வெற்றிசெல்வம்.மகளிர் அணி சந்தானலெட்சுமி .உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
இதேபோல் சோழவந்தான் பேரூர் திமுக செயல் வீரர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் நடந்தது இக்கூட்டத்தில் அவை தலைவர் தீர்த்தராமன் உள்ளிட்ட 18.வார்டு
நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி இளைஞர் அணியினர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.