வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தனியார் திருமண கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் மருதையன் தலைமை வகித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு ராஜா கலந்துகொண்டு வழிகாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் எதிர்கால அரசியல் கடமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் வரும் 28ஆம் தேதி அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது, வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அலுவலகம் டிசம்பர் மாதத்திற்குள் திறப்பது, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை கிளைக் கூட்டங்கள் நடத்தி கட்சி உறுப்பினர் பதிவு மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். உதயகுமார், விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரவி, இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் பி.பாக்யராஜ் மற்றும் ஒன்றிய குழு, கிளைச் செயலாளர்கள் பங்கு கொண்டார்கள்.