வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் மானிய விலையில் பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பழவகை செடிகள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில் பழச்செடி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை கோவிந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.பி. மணிகண்டன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி. ஏ. எஸ். ரஹமத் அலி, தோட்டக்கலை துறையின் தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அஜந்தா, செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு பழச் செடி தொகுப்பில் மா-1, கொய்யா-1, நெல்லி-1, சீதா-1, எலுமிச்சை-2 ஆகிய எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. இதன் மொத்த விலை ரூபா. 200, மானியம் ரூபா .150, வசூல் தொகை ரூபா. 50, கோவிந்தகுடி ஊராட்சிக்கு மொத்தம் 300 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. எனவே பயனடைய விரும்பும் மக்கள் அனைவரும் உழவன் செயலியில் பதிவு செய்து அல்லது வலங்கைமான் வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *