வலங்கைமானில் நான்கு ஆலயங்களின் சுவாமிகள் லாயம் பகுதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட, வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் புதிதாக உபயதாரர்களால் வழங்கப்பட்ட 29 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட குதிரை வாகனத்திலும், செட்டித் தெரு வேம்படி ஸ்ரீ சீதளா தேவி மகாமாரியம்மன், ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலய ஸ்ரீபெரியநாயகி அம்மன், ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஆகிய நான்கு சுவாமிகள் வீதி உலா காட்சியுடன், வலங்கைமான் லாயம் பகுதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மகா மாரியம்மன் ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தற்கார்/ஆய்வர் எஸ். தமிழ்மணி, அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், அந்தந்த ஆலயங்களின் அர்ச்சகர்கள், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *