அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை
அலங்காநல்லூர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், யூனியன் துணை சேர்மன் சங்கீதாமணிமாறன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சந்தனகருப்பு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.