பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
அண்டகுடி- சுந்தரபெருமாள் கோயில் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பு…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் – திருவையாறு சாலை கும்பகோணம் – தஞ்சாவூர் ஆகிய சாலையை இணைக்கும்
சுந்தர பெருமாள் கோவிலிலிருந்து அண்டகுடிக்கு செல்வதற்கு இரு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்டி சாலை அமைத்து தரப்பட்டுள்ளது.
அண்டக்குடி- சுந்தர பெருமாள் கோவில் இணைப்பு சாலையில் ஆங்காங்கே பழுதுகள் ஏற்பட்டுள்ளது, மேலும் சுந்தர பெருமாள் கோவிலில் இருந்து பிரியும் இடத்தில் சாலை மையத்தில் மிகப்பெரிய பள்ளம், அரசலாற்று வடக்கு பகுதி மிகவும் சாய்தளமாக உள்ள சாலை ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம், ஏற்பட்டுள்ளதால், சாலையில் செல்லும் வாகனங்களை சிரமப்பட்டு இயக்கி செல்கின்றனர்.
விபத்துக்கள் ஏதும் ஏற்படும் முன்பாக இச்சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.