இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியார்.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை. இரு குழுவாக பிரிந்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் முகாம்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும் எனவும் இதான் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 வீரர்கள் கொண்ட குழுவினர் ஆய்வாளர் ரவி தலைமையில் சீர்காழியில் முகாமிட்டுள்ளனர்.பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை தொடரும் பொருட்டு மரம் அறுக்கும் இயந்திரம், ரப்பர் படகு, பெரியசுத்தியல்,ஆங்கர், ஜெனரேட்டர்,மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்களுடன் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இக்குழுவில் 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் தரங்கம்பாடி பகுதிக்கும், 40 பேர் கொண்ட மற்றொருகுழுவினர் சீர்காழி பகுதியிலும் தங்கி பேரிடர் மீட்பு பணியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.