கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிற்கிணங்க கொசுக்களினால் உருவாகும் டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் ஆலோசனைக்கு இணங்க சுகாதார அலுவலர் செந்தில்குமார் துப்புரவு ஆய்வாளர் வீரபாகு ஆகியோரின் வழிகாட்டலில் படி சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட பணியாளர்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியை துரிதப்படுத்தி நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேபோல இன்று அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி, மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் சளி, காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சை பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *