தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்.
பொதுமக்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆல்பர்ட் ஜான்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுடன் ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்
பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் அப்போது இரவு காவல் பணியில் இருந்த காவலர்களுக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாட விதமாக கை கொடுத்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் தனி பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி குமார்
திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் லதா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்