அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை செய்து வருகிறது
.முதல் கட்ட பணியாக ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் காளைகள் சேகரிக்கும் (கலெக்ஷன் பாயிண்ட்) இடம் ஆகியவை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .காளைகளை சேகரிக்கும் இடமான தென்னந் தோப்பு பகுதியில் ஜேசிபி மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .
அதே போல் பழம் பெருமை வாய்ந்த கோட்டை முனியசாமி ஜல்லிக்கட்டு திடல் தூய்மைப்படுத்தப்பட்டு சிதலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் கோட்டை மதில் சுவர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் ஆகிய பகுதிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் விரைவில் துவங்க உள்ளது.
ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் காளைகள் சேகரிக்கப்படும் ஆகியவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், மேற்பார்வையில் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் ரகுபதி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சாமிநாதன் , பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான்பானு, உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.