வலங்கைமானில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தலைமை ஆசிரியர் மு. நாவளவன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம் மற்றும் நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.