கீழக்கரையில் கிராமத்தில் ஸ்ரீ ஊர்காத்தஅய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிபட்டி கீழக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஊர் காத்த அய்யனார், சரஸ்வதிதேவி, லட்சுமி தேவி, பிழை பொருத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள வாத்தியம் அனுக்றை பூஜை விக்னேஷ்வரா பூஜை மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் புர்ணாகுதி தீவாதாரணையும் நடைபெற்றது
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மங்கள வாத்தியம் விக்னேஸ்வரா பூஜை மகாசங்கல்பம் புன்யாக வாசனம், சூர்ய சோம பூஜை, கோ பூஜை, திரவ்யாகுதி, தீவாதாரணையும் நடைபெற்றது
அதனை தொடர்ந்து அழகர் கோவில், ராமேஸ்வரம், உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து மேல தாளங்கள் முழங்க எடுத்துச் சென்று கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் அமைந்துள்ள கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கோவில் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ ஊர் காத்த அய்யனார் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கும் கோவில் சார்பாக பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக ஏற்பாடுகளை கீழக்கரை குட்டிமேய்க்கிபட்டி கோவில் பங்காளிகள் செய்து இருந்தனர்.