வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி மாதா கோவில் தெரு பகுதியில் உள்ள பழதடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி மாதா கோவில் தெரு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மாதா கோவில் அருகே உள்ள மின்கம்பம் முற்றிலும் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் உடைந்து விழுந்து ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால், மேலும் காலதாமதம் செய்யாமல் பழுதடைந்த மின்கம்பத்தை உடனே அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *