மகாத்மா காந்தி நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் மதுரை துணை மேயர் நாகராஜன் அவர்கள், எழுத்தாளர் விவேக் ராஜ், நடிகை அங்கிதா, குழந்தை லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப் பட்டனர். கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு இணைந்து ஏற்பாடு செய்தார்கள்.