திருவாரூர் மடப்புரம் பாரதி மக்கள் மன்றம் சார்பில் மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு புகழஞ்சலி திருவாரூர் மடப்புரத்தில் பாரதிமக்கள்மன்றம் சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது
இதனைத்தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மகாத்மாகாந்தியின் 76 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு
மகாத்மா காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட
மாலை 5.17 மணி நேரத்தில் திருவாரூர் மடப்புரத்தில் மகாத்மா மகாத்மா காந்தியடிகள் உருவப்படத்தின் முன் மௌனஅஞ்சலி செலுத்தினர்
அதனைத் தொடர்ந்து தொடர்ந்து காந்தியடிகளார் உருவப்படத்திற்கு சமூகஆர்வலர்கள் , பெண்கள் குழந்தைகள் உட்பட மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்,நிகழ்விற்குதிருவாரூர் பதினாறாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ். என்.அசோகன் தலைமை வகித்தார் ஒன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ் கலியபெருமாள் ஏழாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் வரதராஜன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர் மௌன அஞ்சலி நிகழ்வின்போது தென்றல் சந்திரசேகரன் சக்தி செல்வ கணபதி ஆரூர் பா சீனிவாசன் ஜேகே கலியபெருமாள் ஓய்வு பெற்ற செவிலியர் ருக்மணி அம்மாள் உள்பட பாரதி மக்கள் மன்றம் மற்றும் சுபாஷ் காந்தி நண்பர்கள்குழு மற்றும் சமூக ஆர்வலர்கள் மடப்புரம் பகுதி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்