திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னதாக பிளஸ் டூ மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பிளஸ் ஒன் படிக்கும் 105 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மு. நாவளவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவனேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ், செயற்குழு உறுப்பினர் நல்லம்பூர் கே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்- ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *