திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வளாக நேர்காணல் மூலம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் சிவில், மெக்கானிக்கல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணு தொடர்புகள் மற்றும் கணினி பொறியியல் ஆகிய துறைகளை சார்ந்த மாணவர்கள் பங்கேற்று பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவற்றில் ரானே ஆட்டோ மோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 50 மாணவர்களும், டாக்பே டிராக்டர் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் நிறுவனத்திற்கு 50 மாணவர்களும், வீல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 80 மாணவர்களும், போர்க் வார்னர் நிறுவனத்திற்கு 70 மாணவர்களும் வளாக நேர்காணலில் கலந்து கொண்டதில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி முதல்வர், வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பணி நியமனஆணையை 16-ம் தேதி பெற்றுக் கொண்டார்கள்.

வளாக நேர்காணலுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ், வேலைவாய்ப்பு அலுவலர் ஆரோக்கிய புஷ்பராஜ், அனைத்து துறையை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *