மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு….
மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார்வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் மதுரையில் நடைபெற்ற வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு வெற்றிக்காக உழைத்த அனைத்து செயல் வீரர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக அமைப்புகள் முக்கியஸ்தர்கள் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட செயற்குழு வில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியின் மாநில தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ..இறுதியாக தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.