அலங்காநல்லூர்
தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற அலங்காநல்லூர் ஐயப்பன் ஆலயத்தில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம் நடைபெற்றது, மாலை 4 மணி முதல் 6 மணி வரை அலங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு யாகம் நடைபெற்றது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் அரசு பொது தேர்வுகளில் சிறப்பான முறையில் எழுதி அதிக மதிப்பெண் பெறுவதற்காக லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி முன்பாக யாக வேள்வி சிறப்பாக நடைபெற்றது.
இந்த யாகத்தில் 16 வகையான மலர்கள் வாசனை திரவியங்கள் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான யாகப் பொருட்கள் போடப்பட்டு லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பள்ளி மாணவ மாணவியர் உள்பட ஐயப்ப முருகா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
உலக நன்மைக்காகவும் பருவமழை தவறாது பெய்து விவசாயம் செழிக்க வேண்டிய தியாகத்தில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது .இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அருளாளர் ஏ.எல். சீனிவாசன் சுவாமிகள் உள்ளிட்ட ஐயப்ப முருக பக்தர்கள் செய்திருந்தனர்.
யாகத்தின் முடிவில் இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்களும் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.