திருவொற்றியூரில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு வெப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பாக திருவொற்றியூர் மண்டலத்தில் நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் எம்.கே. மாலதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செயலாளர் கௌதம்லைட் வாழ்த்துரை பேசினார். இந்திய வருவாய் மற்றும் நிதியமைச்சகத்தின் வருமான வரித் துறையின் ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்ட ஏழு நாட்கள் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த முகாமில் மாணவிகள் திருவொற்றியூரில் உள்ள மனநலம் பாதித்த காப்பகத்தில் மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ வடிவுடையம்மன் கோவில் குளத்தை தூய்மை செய்யும் பணி எனத் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமின் கடைசி நாளான என்று பங்குபெற்ற கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது
இந்த முகாமின் நிறைவு விழாவில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு மண்டல அலுவலர் நாகேந்திரன் செயல் பொறியாளர் உசேன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் துணை வனப்பாதுகாவலர் கௌதம், தலைவர் மாநகர நூலக ஆணைக்குழு மனுஷ்ய புத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.