பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாம்..

மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு முகாமினை தொடங்கி வைத்தார்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை, திமுகவின் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கல்யாண சுந்தரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காலை 8-மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய போலியோ சொட்டு மருந்து முகாமில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தை போட்டு செல்கின்றனர். பாபநாசம் மற்றும் கபிஸ்தலம் வட்டார பகுதிகளில் 81-இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *