நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க ம.ம.க செயற்குழு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க ம.ம.க செயற்குழு திருச்சியில் கூடுகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக அவசர தலைமைச் செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 13.2024 (புதன்) அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.
தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.