பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருக்கயிலாய அடியார்கள் உழவாரப்பணி….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா
சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள தேவ நாயகி உடனாகிய சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில் சப்தஸ்தான பெரு விழாவை முன்னிட்டு திருக்கைலாய சிவ பூத கன திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் உழவார பணி நடைபெற்றது.

இதில் சிவப்பணியில் தஞ்சை திருக்கைலாய உழவார திருப்பணி செயல் அலுவலர் தங்கதுரை தலைமையில் சிவன் அடியார்கள் 30க்கும் மேற்பட்டோர் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான நிர்வாகிகள் சார்பில் அம்மாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *