கடையம் அருகில் உள்ள வீரா சமுத்திரத்தில், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி, கோதர் மைதீன் நிதி பரிந்துரையில், மாலிக் நகர் பஸ் நிறுத்தம் முதல் வீராசமுத்திரம் ஆற்றுப்பாலம் வரை அமைக்கப்பட்டுள்ள , தார் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

2023,2024 மாநில நிதி குழு மானியம் மூலம், ரூபாய் ஏழு லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, வீரா சமுத்திரம் தார் சாலை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட நிர்வாகி கோதர் மைதீன், சம்பன்குளம் கவுன்சிலர் ஜஹாங்கீர், திமுக இளைஞரணி நிர்வாகி சதாம்,வீராசமுத்திரம் ஜமாத் தலைவர் ஹாஜாமைதீன், செயலாளர் ஹயாத்,
கடையம் ஒன்றிய ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜப்பார் ஆலிம், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர்,வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவி ஜீனத் பர்வீன், துணைத் தலைவர் நாகூர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் தார் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்,வீரா சமுத்திரம் திமுக செயலாளர் இஸ் ஹாக் மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் சம்பன்குளம் திமுக நிர்வாகி ஆரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *