ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் போஷன் பக்வாடா 2024 விழிப்புணர்வு கண்காட்சி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் போஷன் பக்வாடா 2024 விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார்.
இவ்வாண்டு மார்ச் 23ம் தேதி வரை போசான் பக்வாடா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது ஊட்டச்சத்துடன் கூடிய ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, பாரம்பரியம் மற்றும் உள்ளூர் உணவு முறைகளில் சிறுதானியங்களை பயன்படுத்துதல் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்டல் முறைகள் ஆகிய முக்கிய கருப்பொருட்களை மையப்படுத்தி நடத்தப்படுகிறது ஊட்டசத்து கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டசத்து உணவுகளையும் அங்கான்வாடியில் குழந்தைகளை சேர்த்தல் தொடர்பான துண்டு பிரச்சுரங்களையும் வழங்கினார்
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்மணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் முனைவர். இர.புவனேஸ்வரி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் புவனா குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர்கள் மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அங்கான்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்