நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர் வேலி மற்றும் கூடலூர் நகர வணிகர் சங்கம் இணைந்து கூடலூர் நகர பகுதியில் உள்ள நடை பாதைகளில் உள்ள தடுப்புகளில், பூத்தொட்டிகளை வைத்து நகரை அழகு படுத்தும் திட்டத்தை கூடலூர் கோட்டாட்சியர் , காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூடலூர் வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் கூடலூர் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில், திட்டத்தை இன்
தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் தாமஸ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மற்றும் ராஜகோபால், நகர வணிகர் சங்க தலைவர் அப்துல் ரசாக் ஆகியோர் ரோட்டரி சங்கமும் நகர வணிக சங்கம் இணைந்து நகரை அழகு படுத்தும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்..
அதற்கு கூடலூர் நகராட்சி நிர்வாகம், நகரை மேலும் அழகு படுத்த,கால்நடைகள் நகரின் மையப்பகுதிக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.மேலும் கூடலூர் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பேசும்போது இந்த திட்டத்தை தொடர்ந்து வணிகர் சங்கமும் ரோட்டரி சங்கமம் இணைந்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பேசிய நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் இந்த திட்டம் நகராட்சி சார்பாகவும் ஆலோசனைகள் இருந்தது என்றும் நகராட்சி சார்பாக முடிந்த அளவு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்து பேசினார்
இந்த கூட்டத்தை ரோட்டரி சங்க தலைவர் ஜான்சன் தலைமையேற்று நடத்தினார்.மேலும் இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், கூடலூர் நகர வணிகர் சங்க உறுப்பினர்கள், மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.